12 செப்டம்பர் 2017

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 7

மகா அலெக்ஸாந்தர் தெரியும் தானே. ஜுலியஸ் சீசர் காலத்திற்கு முன்னதாகவே ரோமாபுரியை ஆட்சி செய்த மாபெரும் மன்னர். அவரின் மற்றொரு அழைப்புப் பெயர் தான் சுல்கார்னாயின். இவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்.

உலக வரலாற்றில் நான்கே நான்கு பேருக்குத் தான் ’தி கிரேட்’ எனும் மகா விருதை வழங்கி இருக்கிறார்கள். அந்த நால்வரின் பெயரையும் தெரிந்து கொள்ளுங்கள்.

1. மகா அலெக்ஸாந்தர் (Alexander the Great)

2. மகா அசோகர் (Ashoka the Great)

3. மகா சார்ல்ஸ் (Charlemagne the Great)

4. மகா ஜெங்கிஸ் கான் (Genghis the Great)

சரி. என்னுடைய கேள்வி இதுதான். மகா அலெக்ஸாந்தர் என்பவர் எப்போது எப்படி லங்காவி தீவிற்கு வந்தார். அங்குள்ள ஒரு சுதேசிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இதுவும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

பரமேஸ்வராவைப் பற்றிய சரியான சான்றுகள் நம்மிடம் உள்ளன. முறையான ஆவணங்களும் உள்ளன. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பழஞ்சுவடிக் காப்பகத்தின் ஆவணங்களும் உதவிக்கு உள்ளன. அப்புறம் என்னங்க பயம். (Wade, Geoff (2005), Southeast Asia in the Ming Shi-lu: Asia Research Institute, National University of Singapore)

பரமேஸ்வரா சமய மாற்றம் செய்து கொண்டாரா இல்லையா என்பது இப்போதைக்கு நம்முடைய வாதம் அல்ல. ஆனாலும் அவர் மதம் மாற்றம் செய்யவில்லை என்பதற்கும் நம்மிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. அடுத்து பரமேஸ்வரா இறக்கும் போது அவருடைய பெயர் என்ன என்பதே இப்போதைக்கு நம்முடைய வாதம்.

அதைப் பற்றித்தான் சில உள்ளூர் வரலாற்று ஆசிரியர்கள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றார்கள். மல்லுக்கு நின்றாலும் பரவாயில்லீங்க. மீசையில் மண் ஒட்டிக் கொண்டதா இல்லையா என்று தடவியும் பார்த்துக் கொள்கின்றார்களே. அதைப் பார்க்கும் போது தான் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. விடுங்கள்.

மறுபடியும் சொல்கிறேன். பரமேஸ்வரா இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பரமேஸ்வரா என்றே அழைக்கப்பட்டு இருக்கிறார். வேறு எந்தப் பெயரிலும் அவர் அழைக்கப் படவில்லை. அதைச் சீன வரலாற்றுக் குறிப்புகள் உறுதி படுத்துகின்றன. அதற்கு வலுவான சான்றுகளும் உள்ளன. அப்படி சான்றுகள் இருப்பதை நீங்களும் இப்போது தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.
http://www.epress.nus.edu.sg/msl/

1414-ஆம் ஆண்டு பரமேஸ்வரா தன்னுடைய 70 ஆவது வயதில் காலமானார். அவருடய உடல் நெகிரி செம்பிலான், போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் (Tanjung Tuan) எனும் இடத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் அல்லது சிங்கப்பூரில் உள்ள கென்னிங் மலையின் (Bukit Larangan, Fort Canning, Singapore) அடிவாரத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

இதுவும் இன்னும் உறுதி படுத்தப்பட முடியவில்லை. அதைப் பற்றிய ஆய்வுகளையும் செய்து வருகிறார்கள்.
15ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலேயே சீனாவின் மிங் பேரரசு – பரமேஸ்வரா உறவுகள் ஆரம்பித்து விட்டன. பரமேஸ்வரா இரு முறைகள் சீனாவிற்குச் சென்று இருக்கிறார். யோங்லே எனும் சீன மன்னரைச் சந்தித்து உறவாடி இருக்கிறார்.

பரமேஸ்வரா மலாக்காவிற்குத் திரும்பி வரும் போது அவருக்குத் துணையாகச் சீனக் கப்பல் படைத் தலைவர்களும் கூடவே வந்து இருக்கின்றனர். ஒருவர் செங் ஹோ (Admiral Cheng Ho). இன்னொருவர் இங் சிங் (Admiral Ying Ching). இருவரும் தனித்தனிக் காலக் கட்டங்களில் மலாக்காவிற்கு வந்து போய் இருக்கிறார்கள்.

ஆக, சீனா - மலாக்கா தூதரக உறவுகளினால் மலாக்காப் பேரரசிற்குச் சீனா ஒரு பாதுகாவலராகவே இருந்து இருக்கிறது.
அதனால் தான் சயாம் நாடும், சுமத்திராவின் மஜாபாகித் அரசும் மலாக்காவின் விவகாரங்களில் தலையிடவில்லை.

இந்தக் காரணங்களினால் தான் மலாக்காவின் கடல் வழி வாணிகமும் பெருகத் தொடங்கியது. சீனா, இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு மலாக்கா ஒரு முக்கிய வாணிகத் தளமாகவும் புகழ் பெற்று விளங்கி இருக்கிறது.

1411-ஆம் ஆண்டு பரமேஸ்வராவும் அவருடைய மனைவியும் 540 அரசாங்க அதிகாரிகளுடன் சீனாவிற்குச் சென்று இருக்கிறார். யோங் லே மன்னரை மரியாதை நிமித்தம் கண்டு நட்புறவு பாராட்டி இருக்கிறார். (தொடரும்)

11 செப்டம்பர் 2017

வாட்ஸ் அப் பெண்களே எச்சரிக்கை

(பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வுப் பதிவு)

வாட்ஸ் அப் சமூகத்தளம் என்பது தகவல் பரிமாற்றத்தில் பல்வேறு வசதிகளைக் கொண்டது. நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் பயன்படுத்தி வருகிறோம். பற்பல வசதிகள் இருந்தாலும் பெண்களைத் தொல்லைப் படுத்தும் செயல்கள் வாட்ஸ் அப் வழியாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.




உற்றார் உறவினர்கள், சுற்று வட்டங்கள், நண்பர்களை இணைக்கும் தளம் என அதற்கு ஒரு நல்ல வரவேற்பு இருக்கிறது. இன்னும் இருக்கிறது. பெண்கள் வட்டாரத்திலும் வாட்ஸ் அப் பிரபலமானது. வெள்ளிடைமலை. ஆனாலும் அண்மைய காலங்களில் வாட்ஸ் அப்பில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது மட்டும் உறுதியாகி வருகின்றது.

மற்ற வலைத் தளங்களைக் காட்டிலும் வாட்ஸ் அப்பில் தகவல்கள் மிக எளிதில் பரிமாறப் படுகின்றன. அதனால் யார் ஒருவர் ஒரு தகவலை உருவாக்கினார்; அந்தத் தகவல் எப்படி பரவியது என்பதைப் போலீசாரால் கூட சரியாகக் கண்டுபிடிக்க முடியாத ஓர் அவல நிலை. அதனால் பற்பல தவறான தகவல்கள் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் பரவி வருகின்றன.

வாட்ஸ் அப் மற்றும் இதர சமூக வலைத் தளங்களில் ஒரு பெண் தன் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்து இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பெண்ணுக்கு வேண்டாதவர்கள் ஒரு சிலர் இருக்கலாம். இல்லையா.

அவர்களில் யார் ஒருவர் வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவமானப் படுத்த முடியும். அவருடைய புகைப் படத்தை ஒரு சில ஒலி ஒளி காணொளிகளில் இணைத்து அவற்றை அப்படியே வாட்ஸ் அப்பில் பதிவு செய்து அசிங்கப் படுத்த முடியும்.

அதனால் அந்தப் பெண்ணின் எதிர்காலமே ஒரு கேள்விக்குறி ஆகின்றது... அதுவே பெண்களுக்கு ஓர் அபாய அறிவிப்பு.

*பெண்கள் என்ன செய்யலாம்*

எந்த ஒரு சமூக வலைத் தளமாக இருந்தாலும் சரி. முடிந்த வரையில் பெண்கள் தங்களின் அசல் புகைப் படங்களைப் பதிவேற்றம் செய்யவே கூடாது. மாற்றுப் போலியான படங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

பேஸ்புக்கைப் பாருங்கள். காலையில் செய்த மேக்கப் கலைய விடாமல் இரவு படுக்கும் வரையில் செல்பி எடுத்து என்னையும் பார் என் அழகையும் பார் என்று அரங்கேற்றம் செய்து கொண்டு இருப்பார்கள் சில கிளியோபாட்ராவின் வாரிசுகள்.

அழகின் நினைப்பில் மிதக்கும் அவர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்துகள் காத்துக் கொண்டே இருக்கின்றன. அது அவர்களுக்குத் தெரியுமா. புரியவில்லை.

வாட்ஸ் அப்-இல் நான் எனக்குத் தெரிந்தவர்களுடன் தானே தொடர்பில் இருக்கிறேன். அப்புறம் எப்படி பிரச்சினை வரும். எப்படி ஆபத்து வரும் என சிலர் கேட்கலாம். சரி.

வாட்ஸ் அப்-இல் உங்களுக்குத் தெரிந்தவர்களை மட்டுமே இணைத்துக் கொள்ளலாம். இருந்தாலும் உங்களின் கைப்பேசி எண்களை வைத்துக் கொண்டு யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம். உங்களைத் தொடர்ந்து கண்காணித்து வரலாம். இல்லீங்களா.

நீங்கள் எந்தப் படத்தை Profile படமாக வைத்து இருக்கிறீர்கள்; என்னென்ன செய்திகளைப் பதிவு செய்கிறீர்கள்; எப்போது எல்லாம் வாட்ஸ் அப்பிற்குள் வருகிறீர்கள் போகிறீர்கள் என்பதை எல்லாம் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

இவற்றில் இருந்து தப்ப ஒரே வழி தான் இருக்கிறது. உங்களின் வாட்ஸ் அப் Settings-களை மாற்ற வேண்டும். உங்களுடைய கைப்பேசியில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே உங்களின் தனிப்பட்ட தகவல் தெரிந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும்.

அல்லது யாருக்குமே உங்களின் தனிப்பட்ட தகவல் தெரியாமல் செய்ய வேண்டும். அதற்கான வசதிகளை வாட்ஸ் அப்பில் இருக்கிறது அவற்றை முறையாகச் செயல் படுத்துங்கள்.

முடிந்த வரையில் உங்களின் அசல் புகைப்படம் மற்றும் நீங்கள் எந்தெந்த நேரங்களில் வாட்ஸ் அப் வருகிறீர்கள் போகிறீர்கள் என்பதை முற்றிலுமாக மறைப்பது நலம் பயக்கும்.

அடுத்து ஆண்கள் நிறைந்த வாட்ஸ் அப் குழுக்களில் இணைவதிலும் நிறைய பிரச்னைகள் உள்ளன. எனவே உங்களுக்குத் தெரியாத ஆண்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுக்களில் இருந்து விலகி விடுங்கள். அதுவே சிறப்பு.

உங்களுக்கு நன்றாகத் தெரிந்த நெருங்கிய நண்பர்கள் இருக்கும் குழுக்களில் மட்டுமே இணையுங்கள். நம்பிக்கையான தலைவர்கள் இருக்கும் குழுக்களில் இணையுங்கள்.

ஏன் என்றால் வாட்ஸ் அப் குழு மூலமாக உங்களின் விவரங்கள், உங்களின் தொலைபேசி எண்கள் போன்றவை கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத நபர்களுக்குப் போய்ச் சேரும் வாய்ப்புகள் உள்ளன. தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒருதலைக் காதலில் தோல்வி அடையும் ஆண்கள் பலர். அவர்கள் சம்பந்தப்பட்ட பெண்களைப் பழிவாங்க ரொம்ப நேரம் பிடிக்காது. அந்தப் பெண்களைக் கண்ட மாதிரி மிக மிக மோசமாக அவமானப் படுத்த முடியும். வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

எனவே உங்களுக்கு 100க்கு 100 நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே உங்கள் புகைப்படங்களைப் பகிருங்கள். மற்றவர்கள் எவரிடமும் உங்களின் புகைப்படங்களைப் பகிர்வு செய்ய வேண்டாம்.

வேலை வாய்ப்புகள், நேர்காணல்கள் பற்றிய தகவல்களைத் தருவதாகச் சொல்லும் இணையத் தளங்களை நம்பி உங்களின் புகைப் படங்களை இணைக்கவே இணைக்காதீர்கள்.

நாசம் செய்ய நினைக்கும் மோசக்கார ஆண்கள் பலர் நிறைந்த உலகில் பெண்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளுத்தது எல்லாம் பால் இல்லை. அதை நினைவுபடுத்தவே இந்த நீண்ட பதிவு.

வாட்ஸ் அப் அன்பர்கள் கவனத்திற்கு

வாட்ஸ் அப்பில் தினமும் பல இலட்சம் தகவல்கள் பரிமாறப் படுகின்றன. உங்களுக்கு வரும் ஒரு தகவல் உண்மையானது என 100 சதவிகிதம் தெரிந்தால் மட்டுமே பகிர்வு செய்யுங்கள். அல்லது பிரபல நிறுவனங்களின் இணையத் தளங்களில் உறுதியிட்டுக் கூறப்படும் தகவல்களை மட்டும் பரிமாறுங்கள்.

*அடையாறு புற்றுநோய் மருத்துவமனை*

அண்மையில் புற்று நோய்க்கான மருந்து அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை ஒன்றில் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அந்தத் தகவல் 100 சதவிகிதம் உண்மை இல்லை என அடையாறு புற்றுநோய் மருத்துவமனையே மறுத்து உள்ளது.

பிரபல நடிகர்கள் இறந்ததாகப் பரவிய தவறான தகவல்களையும் நினைவில் நிறுத்துங்கள்.

எனவே உங்களுக்குச் சரியான தகவல் எனத் தெரியாத பட்சத்தில் தகவல்களைப் பரப்பாதீர்கள். சமூக வலைத் தளங்கள் மனிதர்களை இணைக்க உருவாக்கப் பட்டவையே. சமூக விரோதிகள் தவறாகப் பயன்படுத்த இடம் கொடுத்துவிடக் கூடாது.

09 செப்டம்பர் 2017

தெள்ளுப்பூச்சியைக் கொல்லும் எலுமிச்சைப் பழம்

Lemon Spray for Flea Control
 

எலுமிச்சையில் D-limonene எனும் ஒரு ரசாயனம் உள்ளது. இந்த ரசாயனம் தெள்ளுப்பூச்சிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தது.

தேவையான பொருட்கள்:

8 எலுமிச்சை
1.5 லிட்டர் நீர்
356 மில்லி லிட்டர் வினிகர் vinegar


3 மி.மீ. அளவுக்கு எலுமிச்சையை சின்னதாய் வெட்ட வேண்டும். ஒரு பானையில் வெட்டிய எலுமிச்சைகளைப் போடுங்கள். ஒரு முள்கரண்டியால் வெட்டிய துண்டுகளைக் கிண்டுங்கள். எலுமிச்சைத் தோலில் தான் தெள்ளுப்பூசிகளைக் கொல்லும் ரசாயனம் இருக்கிறது. ஆகவே தோலோடு நன்றகப் பிழிய வேண்டும்.



நீர் கலந்து கொதிக்க வையுங்கள். கொதி வந்ததும் ஆகக் குறைவாக சூட்டைத் தணித்து வையுங்கள். 30 நிமிடங்களுக்கு குறைந்த சூட்டில் சூடு ஏற்ற வேண்டும்.



பின்னர் பானையை வெளியே எடுத்து குளிர்ந்த நீரில் வைத்து 8 மணி நேரத்திற்கு ஆற விடுங்கள். அதன் பின்னர் எலுமிச்சைத் துண்டுகளைப் பிழிந்து எடுத்து அவற்றின் சக்கைகளை அப்புறப்படுத்தி விடுங்கள்.


எலுமிச்சை சாறு லேசான கட்டியான நிலையில் இருக்கும். அப்போது வினகர் (vinegar) சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். 
 



அதன் பிறகு spray தெளிப்பான் மூலமாக தெளித்து விடுங்கள். தெள்ளுப்பூச்சிகள் இறந்து விடும்.

தெள்ளுப்பூச்சி தெரிந்ததும் தெரியாததும்

கே: தெள்ளுப்பூச்சி ஒரு சிலரை மட்டும் தாக்கும் என்பது உண்மையா?

ப: உண்மை. ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களின் உடலில் ஒவ்வொரு விதமான ரசாயன கூட்டமைப்பு உள்ளது. மனிதர்களின் தோலின் சுரப்பு நீர் (Skin secretions); வாயு உமிழ்வு (gas emissions) ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும்.


எந்த ஒரு மனிதரின் ரசாயன கூட்டமைப்பு சரியாக அமைகிறதோ அந்த மனிதரை மட்டும் தான் தெள்ளுப்பூச்சிகள் தேடிப் போய் ஒட்டிக் கொள்ளும். அவரே அந்தப் பூச்சிகளுக்கு விருந்தாளி ஆகின்றார்.

ஒருவரின் உடலில் அதிகப்படியான கரியமில வாயு வெளியானால் தெள்ளுப்பூச்சிகள் அவரைத் தேடி வரும்.
 
கே: தெள்ளுப்பூச்சிகள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன?

ப: தெள்ளுப்பூச்சிகள் சமிக்ஞை மூலமாகத் தொடர்பு கொள்கின்றன. ஒரு பொருத்தமான இடம் கிடைத்ததும் அது சமிக்ஞை ஒலியை வெளியாக்கும். அந்த ஒலி வரும் இடத்தை நோக்கி மற்ற பூச்சிகள் படை எடுக்கும்.

ஆகவே சமிக்ஞை ஒரு மனிதரின் உடல்பகுதியில் இருந்து வந்தால் அந்த மனிதரை மட்டுமே மற்ற பூச்சிகள் தேடிச் செல்லும். அதனால் உங்கள் அருகாமையில் இருக்கும் மற்றவர்களை அந்தப் பூச்சிகள் ஒன்றும் செய்வது இல்லை.
(Fleas send signals to other fleas, alerting them of the presence of a warm-blooded meal.)

(http://fleascience.com/flea-encyclopedia/life-cycle-of-fleas/adult-fleas/what-attracts-fleas/)

1. ஈரப்பசை இல்லாமல் 3 மாதத்தில் இருந்து 1 வருடம் வரை உயிர் வாழும்.

2. இருந்த இடத்தில் இருந்து படுக்கை நிலையில் (horizontal) 11 அங்குலம் தாண்டும். செங்குத்தாக (vertical) 6 அங்குலம் குதிக்கும்.

3. புவியீர்ப்பு சக்தியின் (g force) 7 மடங்கு சக்தியை மனிதனால் தாங்க முடியும். ஆனால் தெள்ளுப்பூச்சி 300 புவியீர்ப்பு சக்தியைத் தாங்க முடியும்.

4. தெள்ளுப் பூச்சியினால் பாதிப்பு அடைந்த தளவாடப் பொருட்களில் குறைந்தது 3 மாதங்களுக்கு ஈரப்பசை படாமல் இருக்க வேண்டும்.

5. தெள்ளுப் பூச்சியினால் பாதிப்பு அடைந்த துணிகளைக் கொதிக்கும் நீரில் 10 நிமிடங்களுக்குப் போட்டு எடுத்து உலற வைக்க வேண்டும். அப்போது தான் அந்தப் பூச்சிகளைக் கொல்ல முடியும்.

6. தெள்ளுப் பூச்சியினால் பாதிப்பு அடைந்த துணிகளைத் துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டு சுத்தம் செய்தால் பூச்சி இறந்து போகாது. துவைக்கப்பட்ட துணி உலர்ந்ததும் மீண்டும் அந்தப் பூச்சி இயக்கம் பெறும்.

தெள்ளுப்பூச்சி வாழ்க்கைச் சுழற்சி

தெள்ளுப்பூச்சியின் வாழ்க்கையின் 4 கட்டங்கள்
முட்டை (Egg), முட்டைப்புழு (Larva), கூட்டுப்புழு (Pupa), முழுவளர்ச்சி (Adult).

அதன் வாழ்க்கைச் சுழற்சி 20 - 35 நாட்கள். தட்பவெப்ப நிலை, ஈரப்ப்சை பொருத்து அதன் இனப்பெருக்கம் அமைகின்றது. 85 பாகை வெப்பச் சூழல்; 85 விழுக்காடு ஈர்ப்பசை மிகப் பொருத்தமாக அமைகின்றன. ஈரப்பசை இல்லை என்றால் தெள்ளுப்பூசியினால் இயங்க முடியாது. செயலற்ற நிலையில் இருக்கும். ஒரு வருட காலம் வரையிலும் அமைதியாக உறங்கும்.

ஓர் அறையின் தட்பவெப்ப நிலை 55 பாகைக்கும் கீழே குறைந்து போனால் தெல்ளுப்பூசிகளின் இயக்கம் முடங்கிப் போகும். தெள்ளுப்பூச்சியின் இனப்பெருக்கம் வீட்டின் உள்ளே தான் நடைபெறும். வீட்டிற்கு வெளியே அதிக வெப்பம் என்பதால் அங்கே இனப்பெருக்கம் மிகக் குறைவு.

தெள்ளுப்பூச்சி முட்டை
 
ஒவ்வொரு தெள்ளுப்பூச்சியும் 2 - 14 முட்டைகள் இடும். மனித முடிகள் இருக்கும் இடங்களில் முட்டை இடும். மெத்தை, கம்பளம், தரை விரிப்புக் கம்பளம், பாய் போன்றவை அவை முட்டையிடும் இடங்கள்.

தெள்ளுப்பூச்சி முட்டைப்புழு

14 நாட்களில் முட்டையில் இருந்து முட்டைப்புழு ஆகும்

தடுக்கும் முறைகள்

வெற்றிடத் தூய்மிப்பு (vacuum cleaner) கொண்டு தடுக்கலாம். ஒவ்வோரு நாளும் தூய்மை செய்ய வேண்டும். மருந்துநீர்த் தெளிப்பான் மூலமாக பூச்சிகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.